ராஜஸ்தான் மாநிலத் தலைவர் படுகொலை - திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

ராஜஸ்தான் மாநிலத் தலைவர் படுகொலை - திருச்சியில்  ஆர்ப்பாட்டம்!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் ககன்தீப் சிங் படுகொலை செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும் ராஜஸ்தான் மாநில அரசு மாணவத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,

நாடு முழுவதும் மக்களுக்காக போராடக்கூடிய அரசியல் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட குழுக்கள் சார்பில் மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மௌ.ஜெய்லானி, இளைஞர் பெருமன்ற மாவட்டக் குழு உறுப்பினர் த.விஸ்வா தலைமையில் உறையூர் குறத்தெரு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் க.சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, மாணவப் பெருமன்ற மாநிலத் தலைவர் க.இப்ராகிம், இளைஞர் பெருமன்ற புறநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், இளைஞர் பெருமன்ற நிர்வாகி ஜி.ஆர். தினேஷ்குமார், மேற்கு பகுதி செயலாளர் இரா. சுரேஷ் முத்துசாமி, சி. சந்திர பிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக இளைஞர் பெருமன்ற மேற்கு பகுதி செயலாளர் கே. தர்மராஜ் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision