திருச்சியில் கடை அடைப்பு, போராட்டம்

திருச்சியில் கடை அடைப்பு, போராட்டம்

கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை திறந்து விட மறுப்பதை கண்டித்து கடை அடைப்பு, மறியல் போராட்டத்தையொட்டி திமுக தலைமையிலான கூட்டணி சார்பில் திருச்சி BSNL அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் எம். செல்வராஜ், ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் M.C, மாவட்ட செயலாளர் எஸ். சிவா, மாவட்ட பொருளாளர் சொக்கி. சண்முகம், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர் .முருகன், பகுதி செயலாளர்கள் பி. ராஜா, சையது அபுதாஹிர், சுரேஷ், முத்துசாமி

மாணவர் பெருமன்ற மாநில பொருளாளர் க. இப்ராஹிம், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. அஞ்சுகம், தலைவர் பார்வதி, துணை தலைவர் கே. ஆயிஷா, G. ஈஸ்வரி, வை.புஷ்பம் , நிர்மலா, நதியா, ரஷ்யா பேஹம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், தரைக்கடை வியாபாரிகள், மாதர் சங்க தோழர்கள், இளைஞர், மாணவர் பெருமன்ற தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

கடை அடைப்பு போராட்டத்தில் திருச்சி மாநகரின் மையப் பகுதியான என்.எஸ்.பி ரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் முழுமையாக கடை அடைப்பு போராட்டமும் நடைபெற்றது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision