இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்த நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆயுதங்களை காண்பித்து பணம், நகை, செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைளை எடுத்து வருகிறார்.

கடந்த (23.04.24)-ந் தேதி கண்டோன்மென்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டி.வி.எஸ் டோல்கேட் அருகில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் கத்தியை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, விசாரணையில் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்ட மண்ணச்சநல்லூர், சிறுகாம்பூர் பகுதியை சேர்ந்த பிரவின் குமார் (20), த.பெ.வடிவேல் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிரி பிரவின்குமார் மீது தில்லைநகர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் மற்றும் அடிதடி வழக்குகள் உட்பட 5 வழக்குகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பது தெரியவந்தது.

எனவே எதிரி பிரவின்குமார் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்க ஆணையிட்டார். அதனை தொடர்ந்து எதிரி மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் அபாயகரமான ஆயுத்தத்தை காண்பித்து கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision