திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் கடத்தி வந்த விமான ஊழியர் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் கடத்தி வந்த விமான ஊழியர் கைது

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.

அப்போது விமான ஊழியரான சென்னையைச் சேர்ந்த வினோத்குமார் தங்கத்தை கடத்தி வந்து நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த பக்ருதீன் என்ற பயணியிடம் கொடுத்ததாக
கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்தனர். சோதனையில் பேஸ்ட் வடிவில் தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது.

இருவரிடம் இருந்தும் ரூ.2 கிலோ எடையுள்ள ரூ. ஒரு கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விமான ஊழியர் ஒருவரே கடத்தலுக்கு உடந்தையாக  இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO