திருச்சியில் 10 அடி நீளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது

திருச்சியில் 10 அடி நீளம் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ஆட்டோ நொறுங்கியது

திருச்சியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழைபெய்தது. குறிப்பாக திருச்சி ஜங்ஷன், பாலக்கரை, ஏர்போர்ட் பகுதிகளில் மழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்தது.

இந்நிலையில் திருச்சி பெரிய மிளகுபாறை சேர்ந்தவர் சஞ்சீவ்ராஜ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று வழக்கம் போல் அவர் வீட்டிற்கு எதிரே உள்ள மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதி சுற்று சுவரோரம் ஆட்டோவை நிறுத்தி உள்ளார். நேற்று பெய்த மழையால் சுற்றுசுவர் வலுவிழந்து ஆட்டோ மீது விழுந்து நொறுங்கியது. இதனால் ஆட்டோ முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் முழுவதும் சேதமடைந்தது.

இன்று காலை ஆட்டோ ஓட்டுனர் சஞ்சீவிராஜ் ஆட்டோவை வந்து பார்த்தபொழுது ஆட்டோ மீது சுவர் இடிந்து விழுந்து நெருங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கும், வாகன காப்பீட்டு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC