வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு.

வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள்  திருட்டு.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள ஆர்.கே.வி நகரை சேர்ந்தவர் தேவதாஸ் (60). மேலும் இவரது மனைவி ஆனந்தகுமாரி இவர் முசிறி மின்சார வாரியத்தில் ஏடி யாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 12ம் தேதி இவர்களின் உறவினரின் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருக்கு சென்றுள்ளார்.

இதையடுத்து நேற்று காலை அவரது வீட்டின் அருகாமையில் உள்ள பக்கத்து வீட்டுகார் தேவதாஸ் வீட்டை பார்த்துள்ளார். அப்போது வீடு திருந்து இருப்பதை கண்ட தேவதாஸ் மற்றும் அவரது மனைவி இன்னும் பெங்களூரில் இருந்து திரும்பவில்லை எப்படி வீடு திருந்திருக்கும் என்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தேவதாசிற்கு போன் செய்து வீடுகளின் பூட்டை உடைக்கப்பட்டு திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதனைத்தொடர்ந்து தேவதாஸ் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் காவல்நிலையத்திற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு இச்சம்பவத்தை புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். பின்னர் வீட்டின் உள்ளே பீரோவில் சென்று பார்த்த பொழுது அதிலிருந்த 5 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றம் விலை உயர்ந்த பட்டு புடவைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளிடம் போலீசார் ஆர் கே வி நகர் பகுதியில் உள்ள மக்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் மோப்ப நாய் காவேரி மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். இதில் மோப்ப நாய் மோப்பம் பிடித்து வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரம் சென்ற திரும்பியது. மேலும் தேவதாஸ் மனைவி ஆனந்தகுமாரி கொடுத்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்து வீட்டு பூட்டை உடைத்த திருடிய கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision