மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு தேதி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு தேதி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகான தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது. தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்கள், இத்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவர்கள்,

தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி 
பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர், மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

மேலும், இத்தேர்விக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பு https://skilltraining.tn.gov.in/DET/என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO