திருச்சியில் குடிநீர் குழாய்க்கு பாலூற்றி படையல்

திருச்சியில் குடிநீர் குழாய்க்கு பாலூற்றி படையல்

திருச்சி,தென்னூர், காமராஜ் நகரில் உள்ள குடிநீர்க்குழாய் பல மாதங்களாக பழுதடைந்து உபயோகமற்று கிடக்கின்றதுஇதனை சரிசெய்ய பல முறை மனு அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து கொடுத்தற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் 26-08-2022 (வெள்ளி) காலை 10:30 மணிக்கு அப்பகுதி மக்களைத் திரட்டி பழுதடைந்து உபயோகமற்றுப் போன குடிநீர்க் குழாய்க்கு 'பால் ஊற்றி படையல் போடும் நூதன போராட்டம்'ஜங்ஷன் பகுதிக்குழு உறுப்பினர் தோழர்.M.வள்ளி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர்.S.ரேணுகா, ஜங்ஷன் பகுதிச் செயலாளர் தோழர்.M.I.ரபிக் அஹமது,பகுதிக்குழு உறுப்பினர்கள் தோழர்.A.அப்துல் கையூம்,தோழர். A.ஷேக் மொய்தீன்,தோழர்.M.விஜய்,கிளை செயலாளர்கள் தோழர்.S.முருகன், தோழர்.A.அக்பர் அலி, தோழர்.கவிதா, தோழர்.G.ரேவதி, தோழர்.M.கிருஷ்ணகுமார் மற்றும் அப்பகுதி பெண்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO