திருச்சியில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

திருச்சியில் மூளை சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்

திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து கல்லீரல், கண்கள், இரண்டு கைகள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை (தாலுகா), விசுவக்குடி ஊரைச் சேர்ந்த 64 வயது மதிக்கத்தக்க ஆண், தலையில் அடிபட்டு, திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (19.04.2024) அன்று மாலை 09:50 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு (21.04.2024) காலை 03:00 மணியளவில் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், கண்கள், இரண்டு கைகள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர். மேலும் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

மேலும் இரண்டு கைகளும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண்விழிகளும் இம்மருத்துவமனையில் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் தானம் செய்தது பதினாறாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision