திருச்சியில் புதிய பாலம் உடைப்பு - மீன் பிடித்து மகிழ்ந்த மக்கள்

திருச்சியில் புதிய பாலம் உடைப்பு - மீன் பிடித்து மகிழ்ந்த மக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி ஊராட்சி சித்திரப்பட்டி கிராமம் சித்திரப்பட்டி கொல்லப்பட்டி சாலையில் சீனிவாசன் என்பவர் வயல் அருகில் சில நாட்களுக்கு முன் புதிதாக பாலம் கட்டப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் விவசாயிகள் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இதற்கு இடையில் நேற்று இரவு பெய்த தொடர் மழை காரணமாக இந்த புதிய பாலம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சீனிவாசன் வயலில் புகுந்து செல்கிறது.

இந்த புதிய பாலம் உடைந்து நீர் வயல்வெளிகளில் புகுந்ததால் அப்பகுதி மக்கள் ஒரு கிலோ மற்றும் இரண்டு கிலோ எடையுள்ள மீன்களை வயலில் பிடித்து மகிழ்ந்தனர். ஆனால் துறையூர் சித்திரப்பட்டி பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினால் அமைக்கப்பட்ட புதிய பாலம்

சாதாரண மழைக்கே தாக்கு பிடிக்காமல் உடைந்துள்ளதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn