சமயபுரத்தில் 15 பேரிடம் செல்போன் பறிப்பு - 12 பவுன் தங்க நகைகள் திருட்டு

சமயபுரத்தில் 15 பேரிடம் செல்போன் பறிப்பு - 12 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சுமார் 15 பேரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. மேலும் நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில் (55) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதேபோல் சமயபுரம் அருகே உள்ள மாகாளிகுடியை சேர்ந்த லட்சுமியிடம் (60) இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளி கைச்செயின் திருட்டு போனது. மேலும் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள ஓமாந்தூர் கீழப்பட்டியை சேர்ந்த செண்பகவல்லி (60) என்பவர் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலி திருட்டு போனது.

மேலும் சில பெண்களிடமும் சங்கிலி பறிப்பு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 16-ந்தேதி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision