சமயபுரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம்

சமயபுரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர்  நியமனம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக வி .எஸ். பி இளங்கோவன் 4 வாக்குகள் பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளார் ..

இந்த அறங்காவலர் குழு தேர்வில் வி. எஸ். பி இளங்கோவன், ராஜசுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர்.

 இதில் வி. எஸ் .பி இளங்கோவன் நான்கு வாக்குகள் பெற்று அறங்காவலர் குழு தலைவராக வெற்றி பெற்று பதவி ஏற்றார் .

  இந்த அறங்காவலர் குழு தேர்தலை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல உதவி ஆணையர் லட்சுமணன் தலைமையில் சரக ஆய்வாளர் சீனிவாசன் முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

தேர்வு செய்ய வெற்றி பெற்ற அறங்காவலர் குழு தலைவர் வி எஸ் பி இளங்கோவன் மற்றும் அறங்காவலர்களுக்கு கட்சி நிர்வாகிகளும் கோயில் பணியாளர்களும் வாழ்த்து தெரி வித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision