மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான மாவட்ட குழு கூட்டம்

மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான மாவட்ட குழு கூட்டம்

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காவேரி- வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பிற்கு உட்படும் புலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடுகளை இறுதி செய்வது குறித்து மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான மாவட்ட குழு கூட்டம் இன்று (30.11.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பிரதீப்குமார்   தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், தொரக்குடி. மாத்தூர், அழுந்தூர், அம்மாப்பேட்டை, பாகனூர் மற்றும் கொழுக்கட்டைக்குடி ஆகிய கிராமங்களில் காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்கு நிலமெடுப்பிற்கு உட்படும் புலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடுகளை இறுதி செய்வது குறித்தும், மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்விற்கான மாவட்ட அளவிலான கூட்டத்தில் நில எடுப்பிற்காக குழு உறுப்பினர்களுடன் கலந்துரை கேட்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய வசதியாக மறுவாழ்வு மற்றும் மீள் குடியமர்வு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், ச.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர், (நிலம் எடுப்பு). திருச்சிராப்பள்ளி மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் எம்.செல்வராஜ் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

   

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO