CLAT நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு விலை உயர்ந்த பேனாவை பரிசளித்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தஞ்சை வருகை தந்தார். அரசு ஆதிதிராவிட நலப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்து "நான் முதல்வன்" திட்டத்தில் பயிற்சி பெற்ற ராகினி என்ற மாணவி தேசிய சட்ட
பல்கலைக்கழகத்தில் பயில பொது நுழைவுத் தேர்வில் (CLAT) தேர்ச்சி பெற்று ஜபல்பூரில் உள்ள தர்மசாஸ்திரா தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயில தேர்வாகியுள்ளதையொட்டி வாழ்த்து பெற்றார். அப்பொழுது முதலமைச்சர் மாணவிக்கு
சால்வை அணிவித்து சிறப்பித்து தன்னுடைய பேனாவை வழங்கினார். இப்பேனாவின் மதிப்பு 55 ஆயிரம் ஆகும்.இந்நிகழ்வின் போது மாநகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision