தங்கம் வென்ற தடகள வீராங்கனை தனலெட்சமிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து

தங்கம் வென்ற தடகள வீராங்கனை தனலெட்சமிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் போட்டிகள் கடந்த 15-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேசிய தடகளப் போட்டியில் பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டத்தில் 11.39 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றுள்ளார்.

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீமா தாஸ், டூட்டி சந்த் என இரு புகழ்பெற்ற இந்திய வீராங்கனைகளையும் பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதிச்சுற்றில் 23.26 நொடிகளில் முடித்து, 23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார் தனலெட்சமி.

திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியில் வசித்து வரும் தனலட்சுமியை திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று சாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.