குத்துக் கோலால் குத்தி இரட்டை கொலை - தந்தை, தாய், மகனுக்கு தண்டனை

குத்துக் கோலால் குத்தி இரட்டை கொலை - தந்தை, தாய், மகனுக்கு தண்டனை

திருச்சி மாவட்டம், கல்லக்குடி அருகே, வெங்கடாஜலபுரத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (66). அவரது மகன் நெப்போலியன் (39). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (69) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு, ஆகஸ்ட் 27ம் தேதி, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆரோக்கியசாமி அவரது மனைவி தனமேரி (65), மகன் சசிகுமார் (41), ஆகியோர் சேர்ந்து, தனிஸ்லாஸ், நெப்போலியன் ஆகியோரை குத்து கோலால் குத்தி உள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் இறந்தனர். இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, லால்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து, சசிகுமார், ஆரோக்கியசாமி, தனமேரி ஆகியோரை கைது செய்தார். திருச்சி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனவேல், இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.

மேலும், ஆரோக்கியசாமிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனமேரிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO