காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு -இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு -இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு நடைபெற்ற தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கே வெற்றி பெற்றதை தொடர்ந்து திருச்சி காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தின் வாயிலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலபொதுச் செயலாளரும் மாநில பொதுக்குழு உறுப்பினருமான வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் வெடி வெடித்து பொதுமக்களுக்கு கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவருமான வக்கீல் ராஜேந்திர குமார் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மோகனா, காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் மலைக்கோட்டை முரளி சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன் இளைஞர் காங்கிரஸ் ரபிக்முகமது வக்கீல் ஆறுமுகம் வழக்குரைஞர் சிவகாமி சுப்ரமணி பிரீத்தி ஜங்ஷன் பகுதி பிரியங்கா பட்டேல் வழக்குரைஞர் முருகையா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO