நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதை - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு

நுரையீரலில் சிக்கிய சப்போட்டா விதை - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழு

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த மார்ட்டின் மேரி(58) என்ற பெண் சாப்பிடும் பொழுது தவறுதலாக சப்போட்டா பழத்தின் விதையை விழுங்கி இருக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விழுங்கிய நிலையில், சப்போட்டா பழ விதை ஆபத்தாக மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிட்டது. அது வலது பக்கம் நுரையீரலின் அடிப்பாகத்திற்கு சென்ற நிலையில் மூச்சு திணறல் குறைவு காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு, மருத்துவர் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து விதையை அகற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்துள்ளதாக திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் நேரு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0


#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO