திருச்சியில் காவலர் பயிற்சி நிறைவு விழா

திருச்சியில் காவலர் பயிற்சி நிறைவு விழா

திருச்சி மாவட்டம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கடந்த 14.3.22 முதல் 198 பயிற்சி காவலர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இன்று அவர்களுக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது அதில் சிறப்பு விருந்தினராக மத்திய மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமார்  கலந்து கொண்டார்.

இன்று பயிற்சியை நிறைவு செய்யும் 198 காவலர்களும் ஒரு மாத காலம் மாவட்ட காவல் நிலையம் மற்றும் ஆயுதப்படைகளில் பயிற்சி முடித்த பின்பு, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணியில் சேர உள்ளனர்.

தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியின் முதல்வரான திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் முன்னிலையில் பயிற்சி நிறைவு விழா நல்ல முறையில் நடந்து முடிந்தது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO