கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி நாளை (24.10.2021) தொடக்க விழா

கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி நாளை (24.10.2021) தொடக்க விழா

சோழன் கலை ஊற்று மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் ஒவியர் சித்தன் சிவா-வின் கொரோனா விழிப்புணர்வு ஒவியக் கண்காட்சி நாளை (24.10.2021) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு அரியங்கலம் லெட்சுமி மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சி மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் தண்ணீர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடக்கிறது. சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

ஒய்வு பெற்ற ஆசிரியர் அ.கலைமணி வரவேற்புரையாற்றுகிறார். BHEL, தொ.மு.ச துணைச் செயலாளர் சுரேஷ் கனி நன்றி கூறுகிறார். நிகழ்வுவிற்கு மக்கள் சக்தி இயக்க திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, அன்பாயலம் செந்தில்குமார், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதீஸ்குமார் சிறப்பிக்க உள்ளார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,