திருச்சி மாநகர ஊர்க்காவல் படை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்.

திருச்சி மாநகர ஊர்க்காவல் படை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்திய கொரோனா தடுப்பூசி முகாம்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக திருச்சியில் நேற்று மட்டும் 22 ஆயிரத்து 466 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று திருச்சி மாநகர ஊர் காவல் படை மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடத்தினர்.

திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலையம் அருகிலுள்ள மாநகர ஊர் காவல் படை அலுவலகத்தில் காலை 09.30 மணிக்கு தொடங்கி மாலை 02.00 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த தடுப்பூசி முகாமில் கோவாக்சீன், கோவீசீல்டு தடுப்பூசி 500 பேருக்கு செலுத்தப்படுகிறது. முன்னதாக மாநகர காவல் துணை ஆணையர் சக்திவேல் இந்த தடுப்பூசி முகாமை பார்வையிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF