திருச்சி எம்.பிக்கு கொரோனா தொற்று - வீட்டில் தனிமை

திருச்சி எம்.பிக்கு கொரோனா தொற்று - வீட்டில் தனிமை

திருச்சி பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரது மகனுக்கு கோவிட் தொற்று இருந்த நிலையில் தற்போது இவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் தற்போது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறேன் .இரண்டு நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கோவிட் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn