குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

குடிநீர் கட்டண உயர்வை கண்டித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல்ராஜ், துணை தலைவர் முத்துலெட்சுமி கோபி, ஆணையர் சியாமளாதேவி , பொறியாளர் ராதா மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ராமன், எத்திராஜ், தீபா, சர்மிளா, கெளசிக், அபிலாஷ், சவரிமுத்து, சுதா, அழகு சித்ரா, செல்லம்மாள், வாணி ஆகியோர் நகராட்சியில் காவிரி குடிநீர் மாத்திற்கு 3 நாட்கள் மட்டுமே வருகிறது.

திமுக அரசு தண்ணீர் கட்டண உயர்வு கொண்டு வருவது கண்டனத்து உரியது எனவும், குடிநீர் கட்டண வரி உயர்வு தீர்மானத்தை எதிர்த்தும் திமுக அரசை கண்டித்தும் கோஷமிட்டு பதாதைகள் ஏந்தி  வெளிநடப்பு செய்தனர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision