உறவினர்கள் பாகிஸ்தான் சென்று வந்தார்களா? - திருச்சியில் NIA அதிகாரிகள் சோதனை

உறவினர்கள் பாகிஸ்தான் சென்று வந்தார்களா? - திருச்சியில் NIA அதிகாரிகள் சோதனை

தமிழ்நாட்டில் நெல்லை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 8 ஊர்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியில் அஷரப் அலி என்பவர் சகோதரருடன் வசித்து வருகிறார். இன்று அதிகாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை துவக்கினர்.

5 அதிகாரிகள் வீட்டில் சோதனை ஈடுபட்டனர். பின்னர் அவர் எலக்ட்ரிக்கல் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகிறார். அந்தக் கடை திருச்சி இபி ரோட்டில் உள்ளது. அங்கும் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். இவருடைய உறவினர் பாகிஸ்தானில் இருந்ததாகவும், மற்ற உறவினர்கள் அங்கே சென்று அடிக்கடி அவரை பார்த்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

நான்கிற்க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். என் ஐ ஏ அதிகாரிகள் சோதனையால் பீமநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision