முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு

முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு

திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகர மருத்துவர் சமூக நல சங்க நிர்வாகிகள், அமைப்பாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள், மாநில பிரதிநிதிகள் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை நிதி உதவி வழங்கும் விழா சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜெய் என்கிற ஜெயராம் மனைவி நித்யா, முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் தர்மலிங்கம் வரவேற்றார். மாநகர துணை தலைவர்கள் கோபி, குஞ்சுவேல், ஸ்டாலின், சுரேஷ், பொன்னுச்சாமி,

துணை செயலாளர்கள் மதியழகன், ராமமூர்த்தி, பாண்டியராஜன், ரங்கராஜ், அசோக் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் சுப்பிரமணி கோபிநாத் பாலகிருஷ்ணன் ஆகியோர் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர். மாநகர பொருளாளர் முருகேசன் நன்றி உரையாற்றினார். கூட்டத்தில்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு மருத்துவர் சமூக நல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து, அவரை வருகின்ற 22ம் தேதி நேரில் சென்று வாழ்த்து தெரிவிப்பது, முடி திருத்தும் சமூகத்துக்கு கல்வி வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு கொடுக்க வேண்டி முதல்வரை சந்திப்பது,

கிராமங்கள் தோறும் அனைத்து வகுப்புகளும் முடி திருத்தம் செய்ய ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து ஊர்களிலும் முடி திருத்தும் நிலையங்களை உருவாக்கி அதற்கு அரசு சார்பில் ஒருவரை வேலையில் அமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision