இக்குழந்தையை பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

இக்குழந்தையை பற்றிய தகவல்கள் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

படத்தில் காணும் ஆண் குழந்தை கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம். காவல்காரன்பட்டி பகுதியில் கடந்த (11.06.2024) அன்று பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி நினைவு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்து குழந்தைகள் உதவி மையம் மூலமாக (05.08.2024) அன்று திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டது. அக்குழந்தைக்கு இராம்குமார் என்று பெயரிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை வாயிலாக பெரம்பலூர் நல்ல ஆலோசனை மாதா அன்பு இல்லம் சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி ம.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : தலைவர் / உறுப்பினர்கள், குழந்தைகள் நலக்குழு, கலையரங்கம் வளாகம், மெக்டொனல்டு ரோடு. கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி - 1 

0431-2413819, 9894487572

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம், மெக்டொனல்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி -1 

0431-2413055, 6369102865, 8122201098

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision