சாரநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக அன்பாலயத்திற்கு உதவிகள்!

சாரநாதன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக அன்பாலயத்திற்கு உதவிகள்!

திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பானது. தங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றான முதியோர் இல்லம் /குழந்தைகள் காப்பகம்/மனநலகாப்பகம் ஆகியவற்றை பார்வையிட திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், குண்டூரில் உள்ள அன்பாலயத்தை மனநலகாப்பகம்) 24.04.2022 அன்று பார்வையிட சென்றனர்.

இந்நிகழ்விற்கு காப்பகத்தின் இயக்குநர் T.C.S.செந்தில்குமார் மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்வின் போது 10 மாணவிகள் உட்பட 32 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கு பெற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களோடு கலந்துரையாடினர்.

இதன் வாயிலாக வாழ்க்கை அனைவருக்கும் எளிதாய் அமைவதில்லை என்பதையும் நாம் மற்றவர்களை விட எவ்வளவு வசதிகளை பெற்றுள்ளோம் என்பதையும் உணர்ந்ததாய் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும்அன்பாலயம் அமைப்பின் அரவணைப்பில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக 34 நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களும் தாமாக முன்வந்து ரூ.6250 மதிப்பிலான பொருட்களை வழங்கினர்.

T.C.S.செந்தில் குமார் பேசுகையில்.... இது போன்ற அமைப்புகளுக்கு மாணவர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் எனவும், சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்களின் தலைமைப் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் பாராட்டுவதாகவும் கூறினார். இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் K.கார்த்திகேயன், சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கும், நாட்டு நலப்ணித்திட்ட அமைப்பிற்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO