திருச்சி மாநகரில் நாளை (09.05.2023) குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

திருச்சி மாநகரில் நாளை (09.05.2023) குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம் , டர்பைன் நீர்ப்பணி நிலையம் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் , கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயபுரம் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும்.

கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மின்வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி (09.05.2023) அன்று காலை 9:45 மணி முதல் மாலை 2:00 மணிவரை மேற்கொள்ளப்படவுள்ளதால் , கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை , விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும் , டர்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும்.

 மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும் , பெரியார் நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் தில்லைநகர் , அண்ணாநகர் , காஜாப்பேட்டை , கண்டோன்மெண்ட் , ஜங்ஷன் , உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு ராமலிங்க நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் கல்லாங்காடு ஆகிய பகுதிகளிலும்.

 கலெக்டர்வெல் அய்யளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர் , பாரிநகர் எல்லைக்குடி , காவிரி நகர் , கணேஷ் நகர் , சந்தோஷ் நகர் , ஆலத்தூர் , கல்கண்டார்கோட்டை , திருவெறும்பூர் வள்ளுவர் நகர் , திருவெறும்பூர் ஒன்றிய காலனி , மற்றும் பிராட்டியூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜி நகர் , பிராட்டியூர் , எடமலைப்பட்டிபுதுார் , விஸ்வாஸ்நகர் , ஜெயாநகர் , மற்றும் பிராட்டியூர்காவேரிநகர் ஆகிய பகுதிகளிலும் (09.05.202) அன்று ஒருநாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

நாளை மறுநாள் (10.05.2023) முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து கொள்ளுமாறு திருச்சி மாநகராட்சி
ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn