திருச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை - 2 பேர் கைது திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் அடித்து கொலை - 2 பேர் கைது திமுக ஒன்றிய செயலாளர் உட்பட 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து செங்கல் சோலை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் ரியல் எஸ்டேட் அதிபரான இவர் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் என்பவருக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் சிவக்குமார் தனது வீட்டில் இருந்தார். அப்போது அவரது வீட்டிற்குள் அடையாளம் தெரிந்த இரண்டு நபர்களில் அத்துமீறி நுழைந்த பின்னர் அவர்கள் இருவரும் கண்ணிமைக்கும் வேளையில் தாங்கள் கொண்டு சென்ற சவுக்கு கட்டைகளால் சிவக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் நிலைகுலைந்த சிவக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார் கொலை தொடர்பாக அவரது மனைவி மைதிலி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் அந்த புகார் மனுவில் எங்களுக்கும் யோகேஷ் என்ற மகனும் அபிநயா என்ற மகளும் உள்ளனர். கணவர் சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த வாரம் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவர் விக்னேஸ்வரன் ராஜீவ் காந்தி நகரில் உள்ள செங்கல் சூளை மயானத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் மூலம் அகற்றினர். அதற்கு என் கணவரும் உடந்தையாக உடந்தை என எங்கள் ஊரை சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் கதிர்வேல், பிரபல தொழிலதிபர் நாகராஜ் மகன் பிரபாகரன் என்கிற மருதராஜ் மற்றும் அங்கமுத்து மகன் தீபக் ஆகியோர் ஊரில் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர்.

அந்த விரோதம் காரணமாக நேற்று மாலை பிரபாகரன் மற்றும் தீபக் ஆகிய இருவரும் எங்கள் வீட்டு முன்பு நின்று என் கணவரை வரவழைத்து கட்டையால் தலை, காது தலை பின் பகுதி ஆகியவற்றில் அடித்தனர். தடுக்க சென்ற விக்னேஸ்வரனை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சிவக்குமாரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று போது மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். எனவே என் கணவரை கொலை செய்த பிரபாகரன் தீபக் மற்றும் கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அந்தநல்லூர் ஒன்றிய திமுக கவுன்சிலர் கதிர்வேல், ரியல் எஸ்டேட் அதிபர் ரவி முருகையா உள்பட 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக சோமரசம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள சுடுகாட்டை ஒட்டி உள்ள இடத்தை பெறுவது தொடர்பாக அப்பகுதியில் உள்ள அன்னகாமாட்சி அம்மன் கோவில் அறக்கட்டளை அமைத்தது உரித்து சிவகுமாருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் மல்லியம்பத்து பஞ்சாயத்து தலைவருக்கு நெருக்கமானவர் என்பதால் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர்.

இந்த கொலையில் தொடர்புடைய அந்தநல்லூர் ஒன்றியம் திமுக செயலாளர் கதிர்வேல் உள்பட 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிரபாகரன் மற்றும் தீபக்யை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn