திருச்சியில் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவர்கள் பலி

திருச்சியில் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவர்கள் பலி

திருச்சி மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சம்பத் மகன் வல்லரசு (21), சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா கோட்டை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ரெங்கநாதன் (22), ஆகிய இருவரும் Geography 3ம் படித்து வந்தனர்.

இதே போல் அரியலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் மாரியம்மன் தெருவைச் சேர்ந்த நல்லான் மகன் லெனின் (19) Life science 3rd year படித்து வந்தார். இந்த மூன்று மாணவர்களும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளனர். மூவரும் சேர்ந்து ஒரு இருசக்கர வாகனத்தில் மாத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் போது எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளாகினர்.

மாத்தூர் காவல் நிலையம் எதிரே நடந்த இந்த விபத்தில் வல்லரசு மற்றும் ரெங்கநாதன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். லெனின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று இறந்து விட்டார். இந்த விபத்தில் லாரியை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா புதூர் (PO) அத்தியூர் பாறைமேடு தெருவைச் சேர்ந்த கோபி (31) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

இறந்த மூன்று மாணவர்களின் உடல்கள் திருச்சி அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision