திருச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்

திருச்சியில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய பலே கொள்ளையர்கள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தேவிமங்கலம் ஊராட்சியில் உள்ள மணியங்குறிச்சியில் ஒரே இரவில் பூட்டியிருந்த வீடுகளை குறிவைத்து 14 வீடுகளின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம், இரண்டு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளைடித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு. மணியங்குறிச்சியில் பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை. கதம்ப நகரைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (60). இவர் வீட்டில் ரூபாய் 5000 ரொக்கமும், அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (60) வீட்டில் 4 பவுன் நகை ரூ. 20 ஆயிரம் ரொக்கமும் மற்றும் தனபால் வீட்டில் 5 பவுன் நகையும், ரெட்டியார் தெரு தெருவை சேர்ந்த ரங்கராஜன் வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மற்றும் செல்வநாயகத்தின் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளயடித்துச்  சென்றனர்.

இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சிறுகனூர் போலீசார் மற்றும் லால்குடி டிஎஸ்பி உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் ஒரே இரவில் 14 வீடுகளில் கைவைத்த கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கும்  மேலாக தொடர் மழை பெய்து வந்ததால் மழையை தங்களுக்கு சாதகமாக்கிய கொள்ளையர்கள் மனியங்குறிச்சி கிராமத்தில் ஒரே இரவில் 14 வீடுகளின் பூட்டை உடைத்து ஒரு கிராமத்தையே கலங்கடித்த மர்ம கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், பொதுமக்களிடையே பெரும் பீதியையும் ஏற்படுத்தியது.

மேலும் பூட்டியிருந்த வீடுகளை பார்த்து கொள்ளையர்கள் சாரியாக உடைத்தது எப்படி, வியாபாரிகள் போர்வையில் பகலில் கிராமத்தை கொள்ளையர்கள் நோட்டமிட்டார்களா என பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn