திருச்சி ஶ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

திருச்சி ஶ்ரீரங்கம், சமயபுரம் கோவில்களில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது

திருச்சி ஶ்ரீரங்கம், சமயபுரம் அரங்கநாத கோவஇன்று ( 29.11.2021 ) ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் மாதாந்திர உண்டியல்கள் திறந்து பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூபாய் 53,82,283 ரூபாய் ரொக்கமாகவும், தங்கம் 305 கிராம், 1709 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில்  உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். 

கடந்த 13 நாட்களில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூபாய் 60 லட்சத்து 19 ஆயிரத்து 009 ரொக்கமும், 2 கிலோ 58 கிராம் தங்கமும், 2 கிலோ 130 கிராம் வெள்ளியும், 109 அயல்நாட்டு நோட்டுகளும் கிடைக்கப் பெற்றன எனத் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn