திருச்சியில் 2 நபர்களிடமிருந்து 93 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் 2 நபர்களிடமிருந்து 93 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி மாநிலத்திலிருந்து மலேசியா சிங்கப்பூர் இலங்கை சாரஜா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன அதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் சேவை உள்ளது

இந்த நிலையில், சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஆண் மற்றும் பெண் பயணிகள் தங்களது உடலில் மறைத்து ஒரு கிலோ 485 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது சோதனையில் தெரிய வந்தது.

இதன் மதிப்பு 93 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் என வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தை கடத்தி வந்த பயணிகளிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision