என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் கைது

என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் ஐயப்பன். இவர், நேற்று முன்தினம் இரவு, துவாக்குடி அருகே பழங்கனாகுடி பிரிவு சாலையில், தனது இருசக்கர வாகனத்தில் மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, காரில் வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து, அவரின் கழுத்தில் கைத் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் கழுத்து செயின், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து துவாக்குடி காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவுச் செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது, என்கவுண்டர் செய்யப்பட்ட துரைசாமியின் அக்கா மகன் வெள்ளைச்சாமி என்கின்ற பிரதீப் குமார் (29) என்பது தெரிய வந்தது. அதையடுத்து, பிரதீப்குமாரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரிடமிருந்து வழிப்பறி செய்த தங்கச் செயின், வழிப்பறிக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கி, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision