தேர்தல் மற்றும் கோவில் திருவிழா - மாவட்ட காவல்துறை கொடி அணிவகுப்பு

தேர்தல் மற்றும் கோவில் திருவிழா - மாவட்ட காவல்துறை கொடி அணிவகுப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் பொருட்டும் மற்றும் தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டும், திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார் உத்தரவின் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு வந்துள்ள மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறையினர் இணைந்து ஊர்காவல் படையினரின் வாத்தியகுழு இசையுடன் கொடி அணிவகுப்பை இன்று (01.04.2024)-ம் காட்டுப்புத்தூர் பிரிவு ரோட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ. வருண் குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

2. இதில், 4- கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 8- துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 8- காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், மேற்படி கொடி அணிவகுப்பில் மத்திய பாதுகாப்பு படையினர் 55, திருச்சி மாவட்ட காவல்துறையினருடன், கரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்கள் மொத்தம் 286 பேர் இதில் கலந்து கொண்டனர். மேற்படி கொடி அணிவகுப்பானது காட்டுப்பத்தூர் பிரிவு ரோட்டில் இருந்து புறப்பட்டு மேலத்தெரு, கோட்டைமேடு, சந்தைப்பேட்டை வழியாக வானப்பட்டறை வரை சென்று முடிக்கப்பட்டது. மேலும் நடைபெற உள்ள மதுரை காளியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.வீ. வருண் குமார், அவ்விடங்களை சென்று மேற்பார்வையிட்டார்.

3. மேலும் அப்பகுதியில், குறிப்பாக திருவிழாவின்போது பிரச்சனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

4. இத்திருவிழாவின் பாதுகாப்பு பணியில், காவல் கண்காணிப்பாளர் தலைமையில், 5-கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 - துணை காவல் கண்காணிப்பாளர்கள், 47- காவல் ஆய்வாளர்கள், 107-உதவி ஆய்வாளர்கள், 849-சட்டம் (ம) ஒழுங்கு காவல் ஆளிநர்கள், ஆயதப்படை காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல்படை மற்றும் ஊர்காவல் படையினர் என மொத்தம் -1654 காவல்துறையினர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

5. மேலும் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல்-2024 மற்றும் மதுரை காளியம்மன் கோவில் திருவிழா தொடர்பாக புகார்கள் ஏதேனும் தெரிவிக்க வேண்டி இருப்பின் திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் : 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision