சிறப்பு குழந்தைகளுடன் மருத்துவர்கள் கொண்டாடிய குழந்தைகள் தின விழா

சிறப்பு குழந்தைகளுடன் மருத்துவர்கள் கொண்டாடிய குழந்தைகள் தின விழா

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் குழந்தைகள்தினவிழா பல் மருத்துவ பகுதி சார்பாக கொண்டாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குறைவான குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கலந்து கொண்டனர்.

இவ்விழா மருத்துவமனை முதல்வர் வனிதா மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், துறை பேராசிரியர் சிராஜுதீன் நசீர், மைதிலி, காயத்ரி மற்றும் ராஜேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பல் மற்றும் வாய் சுகாதாரத்தில் தேவையான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn