நியாயவிலை கடை அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

நியாயவிலை கடை அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஓழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள், சட்டத்திற்கு புறம்பாக ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் ஏதும் நடைபெறாத வண்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து செய்யவும், வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும்
ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின் பேரில், கடந்த 06.11.21-ந் தேதி திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் தலைமையில் தணிக்கை செய்தபோது காட்டூர், திருநகர் பகுதியில் 
வசிக்கும் இஸ்மாயில் (40) என்பவர் சுமார் 4300 கிலோ பொது விநியோகத்திட்ட ரேசன் அரிசியை பதுக்கி வைத்திருந்த வரை 06.11.21ந்தேதி கைது செய்து, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை குற்ற வழக்கு பதிவு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேற்படி இஸ்மாயில் மீது ஏற்கனவே 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளதால், அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு திருச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க ஆணையிட்டார்.

அதன் பேரில் கடந்த 06.11.21-ம்தேதி முதல் திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி இஸ்மாயில் என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட ஆணையினை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளர் சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn