குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி கைது

குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் ரவுடி கைது

திருச்சி மாநகரம், கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை பெரியசாமி டவர் அருகில் சிந்தாமணியை சேர்ந்த ஜெகன் ஆரோக்கியநாதன் என்பவர் கடந்த 24.09.21ந்தேதி தள்ளுவண்டியில் அசைவப்பொருள் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது தென்னூர் சேர்ந்த பிரவின்காந்த் வயது (21) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரது சட்டை பையில் வைத்திருந்த பணம் ரூ500/-ஐ பறித்து கொண்டு சென்றுவிட்டதாக கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் ஜெகன் ஆரோக்கியநாதன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேற்படி கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டதில் எதிரி பிரவீன்காந்த் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வருவதால் அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் எதிரியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனைத் தொடர்ந்து இன்று 23.10.2021 தேதி திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி பிரவீன்காந்த் என்பவருக்கு குண்டர் தடுப்பு காவல் அவனை ஆணை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.me/trichyvisionn