திருச்சியில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு:

திருச்சியில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் உயிரிழப்பு:

திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகர் பகுதியில் உள்ள வேதாத்திரி நகரைச் சேர்ந்த
தச்சுச் தொழிலாளிகளான சீனிவாசன் மற்றும் அவரது மகன் செந்தில் ஆகியோர் இன்று அதிகாலை தச்சுத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து கோட்டை போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தையும் மகனும் எதிர்பாராத மின்சாரம் தாக்கி ஒரே நேரத்தில் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது