மகன் கண்டித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை.

மகன் கண்டித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைகோரை சவேரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் தேவதாஸ் (56). இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது மகன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த தேவதாஸ் கடந்த 14ம் தேதி விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு தொடர்ச்சி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision