திருச்சியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை

திருச்சியில் பெண் காவல் உதவி ஆய்வாளர்  தற்கொலை

திருச்சி மாவட்டம் டிவிஎஸ் டோல்கேட் இக்பால் காலனியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன்.
இவரது மனைவி ஆதிலட்சுமி(56). இவர் நவல்பட்டு நிரந்தர காவலர் பயிற்சிப் பள்ளியில் வார்டனாக பணியாற்றிய இவர் காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
ஒருவர் லெனின் BE மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லாமல் உள்ளார்.
மற்றொருவர் பாரத், தனியார்  கல்லூரி ஒன்றில் எம்பிஏ படித்து வருகிறார்.
பெண் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி சர்க்கரை நோய் மற்றும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காவலர் குடியிருப்பில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமியின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO