குழுமணி சாலையில் உள்ள மீன் மார்க்கெட் நாளை முதல் இம்மாதம் இறுதி வரை செயல்படாது திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபாரிகள் நல சங்கம் 

குழுமணி சாலையில் உள்ள மீன் மார்க்கெட் நாளை முதல் இம்மாதம் இறுதி வரை செயல்படாது திருச்சி மாவட்ட மீன் மொத்த வியாபாரிகள் நல சங்கம் 

திருச்சி மாவட்ட மொத்த மீன் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் தங்களின் குடும்பத்தின் பாதுகாப்பை கருதி நாளை ( 20.05.2021 ) வியாழக்கிழமை முதல் ( 30.05.2021 ) ஞாயிற்றுக்கிழமை வரை உறையூர் குழுமணி சாலையிலுள்ள மொத்த மீன் வியாபாரம் காசி விளங்கி மார்க்கெட்டில் செயல்படாது.

மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மொத்த வியாபாரிகள் வேறு எந்த இடத்திலும் வியாபாரம் செய்யக்கூடாது என சங்கம் முடிவு எடுத்துள்ளது.

மேற்கண்ட தீர்மானங்களை அனைத்து மொத்த வியாபாரிகளும் ஒத்துக்கொண்டு ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். மீறி வேறு இடங்களில் மொத்த வியாபாரம் செய்தால் சங்கம் எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK