சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் திருவெறும்பூர் அருகே உள்ள நடராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டப் பொழுது சட்ட விரோதமாக சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தது.

உடனடியாக அங்கு சென்று பார்த்த பொழுது சூதாட்டத்தில் ஈடுபட்ட நடராஜபுரத்தை சேர்ந்த கண்ணன் (45), கீழ முறுக்கு வடக்கு தெருவை சேர்ந்த மதியழகன் (47), அதே பகுதியை சேர்ந்த ஜெய்சங்கர் (50), தோகூரை சேர்ந்த ரவி(34), ஆகிய நான்கு பேரையும் எஸ்ஐ கவிதா தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய சீட்டு கட்டுகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn