பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ஒமேகா சென்டர் ஆஃப் ஹோப் எம்ப்ளாய்மென்ட் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் சார்பில், பணியிடத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் என்ற தலைப்பில் கடந்த  புதன்கிழமை அன்று  கருத்தரங்கம் நடைபெற்றது.  

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தடை மற்றும் தீர்வு குறித்த சட்டம்  பற்றிய  விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஏராளமான பணிக்குச் செல்லும் பெண்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பணியின் போது பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் மாவட்ட அளவிலான புகார்கள், உள்ளூர் புகார்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

திருச்சி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் டாக்டர் பிரபு சிறப்புரையாற்றினார்.  மையத்தின் தலைவர் ரிதின் ஜெல்திஸ் & ஞானப்பிரகாசம் ஜெயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

#திருச்சி விஷன்  செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

   

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO