அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியில் ஃபிரீடம் 2022

அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கல்லூரியில் ஃபிரீடம் 2022

திருச்சிராப்பள்ளி நவலூர் குட்டப்பட்டில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் தோட்டக்கலை கல்லூரிகளின் சார்பில் அனைத்து வேளாண்மை மற்றும் வேளாண்மை தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் பங்கேற்று இரண்டு நாட்கள் நடைபெறுகின்ற ஃபிரீடம் 2022 (FREEDOM 2022) நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் இன்று (12.7.22) குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் முனைவர்.சி.வன்னியராஜன், தோட்டக்கலை கல்லூரி முதல்வர் முனைவர். பி.பரமகுரு ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் தோட்டக்கலைக்கல்லூரியில் பசுமைக்குடில் அமைத்து பல்வகை தோட்டக்கலைச் செடிகள் வளர்ப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், பார்வையிட்டு ஆய்வு செய்து செடி வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இந்நிகழ்வின் போது தோட்டக்கலை கல்லூரி முதல்வர் முனைவர் பி.பரமகுரு வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர் சி வன்னிய ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO