திருச்சியில் 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சியில் 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த 1 கோடியே 14 லட்சத்து 24 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 920 கிராம் எடையுள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.