திருச்சி விமான நிலையத்தில் 13 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 13 லட்சம் மதிப்புள்ள  தங்கம் பறிமுதல்

திருச்சியில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்த  இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணி ஒருவரிடம் வான் நுண்ணறிவு பிரிவினர் சுங்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அந்த ஆண் பயணி தனது பையில் வைத்திருந்த பையில், வாசனை திரவிய டப்பாவில்,  வட்ட வடிவிலான 2 தங்க தகடுகளையும்,செவ்வக வடிவிலான 3 தங்க தகடுகளையும், 7 தங்க கம்பிகளையும் மறைத்து வைத்திருந்ததை, வான் நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

கடத்திய தங்கத்தின்  மொத்த எடை 259 கிராம். அதன் மதிப்பு ₹13 லட்சத்து 36 ஆயிரத்து 440 என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO