செருப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம்

செருப்பில் மறைத்து வைத்திருந்த ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம்

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஆண் பயணி ஒருவர் தனது செருப்பில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 28 லட்சத்து 85 ஆயிரத்து 179 மதிப்புள்ள 401.500 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் தங்கம் கடத்தி வந்த ஆண் பயனியை கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision