எடப்பாடி பழனிச்சாமிக்காக குடும்பத்துடன் தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு..

எடப்பாடி பழனிச்சாமிக்காக குடும்பத்துடன்  தீச்சட்டி ஏந்திய கஞ்சா கருப்பு..

எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டி திரைப்பட நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினார்.

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டி திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு குடும்பத்துடன் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னி செட்டி பால்குடம் எடுத்தேன் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

முன்னதாக சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் இருந்து கஞ்சா கருப்பு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அக்னிச் சட்டி ஏந்தியும், பால்குடம் சுமத்தும் கோவிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்தினர்.

அக்னி ஜட்டி எந்த ஊர்வலமாக வந்த கஞ்சா கருப்பு அக்னி சட்டி இறக்கம் குண்டம் அருகே வந்தபோது ஆத்தா மாரியாத்தா எடப்பாடி ஐயா எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மனமுருகி வேண்டி அக்னி சட்டையை அக்னி குண்டத்தில் இறக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் செய்தவர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

எடப்பாடி பழனிச்சாமி ஐயாவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததே பெரிய விஷயம்.

நடைபெற இருக்கின்ற எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் எல்லா தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டி குடும்பத்துடன் அக்னிச்சட்டி பால்குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடனை செலுத்தியுள்ளேன்.

மேலும் திருச்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து உள்ளேன்.

பல்வேறு மாவட்டங்களில் தற்போது பிரச்சாரத்தை மேற்கொண்டு உள்ளேன். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் முறையிட்டால் தானே நடக்கும்.

எதிர்க்கட்சியினர்கள் பாதந்தாங்கி பழனிச்சாமி என விமர்சிப்பது காமெடி பண்ணுவது பண்ணிக்கொண்டுதான் இருப்பார்கள் ஜெயிக்க பிறந்தவர்கள் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி ஐயா தலைமையிலான அதிமுகவினர் என்றைக்கும் ஒற்றைப் பரம்பரை தான். தனித்து நின்று ஜெயித்து தன் பழக்கம். கூட்டணி அமைத்து நின்று பழக்கம் இல்லை. என்றைக்கும் எடப்பாடி எடப்பாடி தான். அவர் ஒரு விவசாயி அவருக்கு விவசாயிகளுடைய கஷ்டங்கள் நஷ்டங்கள் தெரியும்.

அதனால் பேசுபவர்கள் பேசிக்கொண்டே இருக்கட்டும் தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும். ஜெய்பவர்கள் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள் எடப்பாடி ஐயாவை போல.

நாங்கள் எப்பொழுதுமே இரட்டை இலை தான் இரட்டலை அமைந்தால் தான் நல்லது என்று நாங்கள்  நினைப்போம் என்று பேசினார்.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision