சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சாலையை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் அணைக்கரைப்பட்டி அருகே அமைந்துள்ள களத்துப்பட்டி கிராமத்தில் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்து வருவதாகவும் சேரும் சகதியமாக நிறைந்த சாலையில் பாதசாரிகள் கூட நடந்து செல்ல முடியவில்லை வாகன ஓட்டிகள் வாகனங்களில் செல்ல முடிவதில்லை.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கும் இல்லை என்றும் ஊராட்சி நிர்வாகம் அந்த சாலை ஏற்கனவே அமைத்து விட்டதாகவும் கூறுவதால் ஆத்திரமடைந்துள்ள அப்பகுதி கிராம மக்கள் தற்போது சாலையில் உள்ள சகதியில் நாற்று நட்டும் வையம்பட்டி கரூர் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இதனால் வழி சாலை போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தற்போது இது குறித்து போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO